ஆய்வுகள்

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 6

May 9, 2012
ஆய்வுகள்

நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.(25:08)

மேற்கண்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று நாம் வாதிட்டோம். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் மேற்கண்ட வசனத்துக்கு மாற்றமாக இருப்பதால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல எனவும் நாம் வாதிட்டிருந்தோம்.

அதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி மேற்கண்ட வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டாலும் சூனியம் செய்யும் நபர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று குர் ஆன் வசனத்துடன் விளையாடி இருக்கிறார்.

இது குறித்து அவர் எடுத்து [...]

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை
April 30, 2012
ஆய்வுகள்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்குக் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதே அடிப்படையில் நபித்தோழர்களும், இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை.

குர்ஆனுக்கு முரண்படும் குறிப்பிட்ட சில ஹதீஸ்களுக்கு மாத்திரம் பதில் என்ற பெயரில் உளறுகிறார்களே தவிர குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை விதியை மறுக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த அடிப்படைக்குப் பல சான்றுகளை நாம் தெளிவுபடுத்தி [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 5

ஸிஹ்ர் ஓர் ஆய்வு –  தொடர் 5
April 14, 2012
ஆய்வுகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் பின் வருமாறு கூறியிருந்தோம்.

சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.
வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மன நிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.
பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 4

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 4
March 27, 2012
ஆய்வுகள்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஏற்கத் தக்கதல்ல என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்.

நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து நாம் எடுத்து வைத்த எந்த வாதத்துக்கும் இஸ்மாயீல் ஸலஃபி உருப்படியான ஒரு பதிலையும் தரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் யூதர்கள் நபிகள் நாயகத்தை விட யூத குருமார்கள் ஆன்மிக ஆற்றல்மிக்கவர்கள் என்று எண்ணி இருப்பார்கள் என்பதையும் ஒரு காரணமாக முன் வைத்து நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபித்தோம்.

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 3

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 3
March 19, 2012
ஆய்வுகள்

ஸிஹ்ர் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமா? என்பதைப் பார்ப்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் செய்தி உண்மையானதா? என்பதைப் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டது என்பதை ஆதரிக்கும் இஸ்மாயீல் ஸலஃபி கூட் நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் வாதிடுகிறார். தம் மனைவியுடன் சேராமலே சேர்ந்தது போன்ற போலித் தோற்றம் ஏற்பட்டதே தவிர அவர்களின் மன நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் இதை மறுக்க முடியாது என்பது தான் அவரது வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டால் அந்தச் செய்தி ஏற்கக் கூடியது [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு தொடர் – 2

ஸிஹ்ர் ஓர் ஆய்வு தொடர் – 2
February 29, 2012
ஆய்வுகள்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது குறித்து நாம் விரிவான விளக்கம் அளித்து பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். அதில் முதலாவதாக நாம் கேட்ட பால் குடி தொடர்பான ஹதீஸ் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி இது வரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அளிக்கும் பதிலில் எல்லா முடிச்சுக்களும் அவிழ்ந்து விடும் என்ற போதும் பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன் என்ற (உமர் அலி) மனநிலையில் அவர் இருப்பது தெரிகிறது.

ஆயினும் நானும் பதில் சொன்னேன் என்று காட்டிக் கொள்வதற்காக மலகுல் மவ்த்தை மூஸா நபி கன்னத்தில் அறைந்த ஹதீஸ் குறித்து சில தமாஷான பதில்களைக் கூறியுள்ளார். நாம் கேட்ட அனைத்துக்கும் பதில் வந்த பின் மொத்தமாக ஒரே [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

ஸிஹ்ர் ஓர் ஆய்வு
February 26, 2012
ஆய்வுகள்

அல் குர்ஆனும் சுன்னாவும் முரண்படுமா என்று “ஞான சூனியங்கள் ” அண்மைக் காலமாக கேள்வி எழுப்பி வருகின்றன. அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது. அதற்கு விளக்கவுரையாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன.
எனவே அல்குர்ஆனுக்கு முரணாக உள்ளவைகள் ஹதீஸ்களாக இருக்க முடியாது. ஹதீஸ்கள் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக் கதைகளும் இடைச் செறுகள் செய்யப்பட்டன. அந்த தொடரில் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் பைத்தியமாக இருந்ததாக சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் புகுத்தப் பட்டுள்ளன.
சிந்திக்காத சிந்தனைத் திரணற்ற சிலர் நபியையும் கேவலப்படுத்தி வருகின்றர். எனவே இது தொடர்பான தெளிவை வளங்குவதற்காக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

ஸிஹ்ர் ஓர் ஆய்வு- தொடர் 1

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த [...]

சிக்கனமான திருமணம்

சிக்கனமான திருமணம்
February 19, 2012
ஆய்வுகள்

விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் [...]

பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்ளதாமே?

பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்ளதாமே?
February 19, 2012
ஆய்வுகள்

பெண்கள் கத்னா செய்யத் தேவையில்லையென்று தாங்கள் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புக்கள் சந்தித்தால் குளிப்புக் கடமையாகும் என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் .எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் விளக்கம் தரவும்.

முஹம்மத் நஸ் ரீன்

பதில் :

நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

526 عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ [...]

குப்புறப் படுத்து தூங்கலாமா?

குப்புறப் படுத்து தூங்கலாமா?
February 10, 2012
ஆய்வுகள்

(சமீபத்தில் ஆன்லைன் பீ.ஜே யில் வெளியான இந்த ஆய்வை வாசகர் நலம் கருதி எமது இணையத்தளத்திலும் வெளியிடுகிறோம்)

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

பதில்

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

2692    حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ الرَّحِيمِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا [...]

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
August 6, 2011
ஆய்வுகள்

கட்டுரை ஆசிரியர் : Rasmin M.I.Sc

ஒரு செய்தியைச் சொல்வதற்கு பலவிதமான முறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள்.பேச்சின் மூலம், செய்கையின் மூலம், எழுத்தின் மூலம் என்று பலவிதங்களிலும் நம் மனதில் தோன்றும் செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

சிலர் சில செய்திகளை கவிதை மூலம் சொல்வார்கள். இந்தக் கவிதை முறை தகவல் எத்திவைப்பைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு மாற்றமான இணை வைக்கும் கருத்துக்களை கொண்ட கவிதைகளை எடுதுவதற்கோ பாடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.

கவிஞர்கள் நிறைந்த, எடுத்ததற்கெல்லாம் கவிதையினாலேயே சண்டையிட்ட காலத்தில் தான் திருமறைக் குர்ஆனை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினான்.

மக்கத்து [...]