செய்திகள்

தம்புள்ள பள்ளி இடிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்.!

May 7, 2012
செய்திகள்

“மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

கடந்த 20,04,2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம் இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ளஇ ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!

‘பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய [...]

தம்புள்ள பள்ளியை இடிக்க வந்த கயவர்களுக்கு எதிராக SLTJ செய்த மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி

தம்புள்ள பள்ளியை இடிக்க வந்த கயவர்களுக்கு எதிராக SLTJ செய்த மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி
April 30, 2012
செய்திகள்

புத்த மதவெறிபிடித்த காவிச் சண்டாளர்களால் தம்புள்ளை அல்ஹைரிய்யா ஜூம்ஆப் பள்ளி தாக்கப்பட்டைக் கண்டித்தும் ஏனைய பள்ளிகளைப் பாதுகாக்கவும் பள்ளி மீது தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வெள்ளியன்று 27-04-2012 ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மாளிகாவத்தையிலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை நகர்ந்த இந்த ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கவும், உரிய இடத்திலேயே முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவும் ஆவன செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கோசமிட்னர், மாற்றுக் காணியில் பள்ளிவாசலை அமைக்க முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த [...]

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்
April 27, 2012
செய்திகள்

அபூ ஹம்னா ஸலபி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. [...]

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்
April 27, 2012
அறிவிப்பு

அல்லாஹ்வின் ஆலயத்தை காப்பதற்கான மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

கடந்த 20.04.2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின்  உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும், அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி,எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 60 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!
‘பௌத்தர்களுக்குரிய புனித பூமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய இடமளியோம்! என்ற இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை தட்டிப்பறிக்கும் [...]

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது
April 24, 2012
செய்திகள்

இலங்கை நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றுப் பாரம்பரியத்துடன், நாட்டின் இறைமையைக் காப்பதிலும் தாய் நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும் சக இனத்தவர்களோடு சகோதர வாஞ்சையோடும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் இன்று வரை நாட்டின் நலனிற்காக முஸ்லிம்கள் உழைத்து வருகிறார்கள். அண்மையில் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக இலங்கையில் வாழும்  அனைத்து  முஸ்லிம்களும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து, தாய்நாடு மீதான தமது தேசப்பற்றை வெளிப்படுத்தினர். அத்தோடு, அனைத்து முஸ்லிம் நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து,இலங்கைக்கு ஆதரவளிக்க முஸ்லிம்களே வழிவகுத்தனர்.

நாட்டின் பெரும் பான்மை இனத்தவர்களால் அவ்வப்போது ஏற்படும் இன்னல்களை சட்ட ரீதியாக அணுகுபவர்களாகவும் கடும்போக்கு மதத் தீவிரவாதிகளால் சீண்டப்படும் போது, பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் சட்டத்தையும் ஒழுங்கையும் [...]

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது
April 11, 2012
செய்திகள்

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் 8.7 சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி உருவாகியிருக்கிறதா என்பது தெரியாவிட்டாலும் பிராந்திய நாடுகளின் அரசாங்கங்கள் உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது.

இந்தப் பிராந்தியத்தில் வழக்கமாக பூகம்பங்கள் தாக்குவது வழக்கம். இந்து சமுத்திர பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியில் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் பேர் அச்சேவில் பலியானார்கள்.

அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலீ மீட்டர் தொலைவில் கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் [...]

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு
March 29, 2012
செய்திகள்

ஆன்லைன் பீ.ஜே. இணயத்தளத்தில் சகோதரர் பீ.ஜே. அவர்கள் 2012.03.28ம் திகதி இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளார். வாசகர்களின் நலன் கருதி நமது இணயத்தளதிலும் அதை வெளியிடுகின்றோம்.

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்கு மாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் [...]

இதோ வெளிவந்து விட்டது “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” சிங்களத்தில்

இதோ வெளிவந்து விட்டது “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” சிங்களத்தில்
March 29, 2012
செய்திகள்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் எமுதிய “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” என்ற புத்தகத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் B.Com அவர்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தொழுகையின் அனைத்து சட்ட திட்டங்களும் நபிகளாரின் முழுமையான வழிகாட்டலின் கீழ் கற்றரிந்து செயல் படுத்த இப்புத்தகம் முழுமையாக துணை புரியும் என சிங்களம் பேசும் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

புத்தகம் கிடைக்குமிடம்:

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம்

இல: 241A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,

மாளிகாவத்தை,

கொழும்பு -10.

தொடர்புகளுக்கு 0112677974, [...]

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
February 28, 2012
சமூக சேவை

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை [...]

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!
February 27, 2012
அறிவிப்பு

ஜெனீவா பிரேரணைக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டம்!
27.02.2012 பகல் 2.00 மணிக்கு S.L.T.J. தலைமையகத்திற்கருகில்
அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில்ää இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.    47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.    இலங்கைக்கு எதிரான பிரேரணையை [...]

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி !

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி !
August 15, 2011
செய்திகள்

மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

“இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை” என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

ஹதியா தன்னுடைய இரெண்டாம் வருடத்தில் இருந்து ஹிஜாப் அணிய தொடங்கியுள்ளார்.ஹதியாவின் ஹிஜாப் அணிவதை [...]