“மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)
கடந்த 20,04,2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம் இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ளஇ ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!
‘பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய [...]















