ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் SLTJ சிலாபம் கிளை காரியாலயத்தில் 15.04.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்! இந்த இரத்த தான முகாமில் பெண்கள் உட்பட 48 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மூன்றாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.










