உதவிகள்

கேகல்லை மாவட்டம் கெடபேரியவில் SLTJ யின் இலவச குடிநீர்த் திட்டம்

April 17, 2012
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கேகல்லை மாவட்டம், அரணாயக தேர்தல் தொகுதி, கெடபேரிய எனும் ஊரில் வாழும் மக்களுக்காக ரூபா 125000  செலவில்  2012.04.07ம் திகதி ஒரு பொதுக் கிணறு கட்டிக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! மக்களின் நலன் கருதி மிகவும் அவசியமான ஒரு இடத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதம் இந்தக் கிணறு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரச்சாரகர்களுக்கு மடி கணிணி அன்பளிப்பு.

இரண்டு பிரச்சாரகர்களுக்கு மடி கணிணி அன்பளிப்பு.
January 9, 2012
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மூலமாக ஜமாத்தின் தேசிய பேச்சாளர்களான சகோதரர் பர்சான் மற்றும் சகோதரர் அஜ்மீர் ஆகியோருக்கு மடி கணிணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. பிரச்சாரகர்களின் பிரச்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வேலைத் திட்டத்தின் முதற் கட்டமாகவே இவ்வன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

SLTJ தலைமை மூலமாக சிலாபம் கிளைக்கு DVD ரைட்டர் அன்பளிப்பு.

SLTJ தலைமை மூலமாக சிலாபம் கிளைக்கு DVD ரைட்டர் அன்பளிப்பு.
December 29, 2011
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையின் தஃவா செயல்பாட்டிற்காக தேசிய தலைமைகத்தின் மூலமாக DVD ரைட்டர் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியாழ் அவர்களிடமிருந்து சிலாபம் கிளையின் உறுப்பினர் சகோதரர் சத்தார் அவர்கள் DVD ரைட்டரை பெற்றுக் கொண்டார்.

SLTJ சிலாபம் கிளையின் தஃவா செயல்பாட்டிற்கு SLTJ தலைமை மூலம் குர்ஆன் மொழியாக்கம் பிரதிகள் அன்பளிப்பு.

SLTJ சிலாபம் கிளையின் தஃவா செயல்பாட்டிற்கு SLTJ தலைமை மூலம் குர்ஆன் மொழியாக்கம் பிரதிகள் அன்பளிப்பு.
December 29, 2011
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகத்தின் மூலம் ஜமாத்தின் சிலாபம் கிளையின் தஃவா செயல்பாடுகளுக்காக சகோதரர் பி.ஜெ மொழியாக்கம் செய்த திருமறைக் குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையின் உறுப்பினர் சகோதரர் சத்தார் அவர்கள் பிரதிகளை தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரர் முயீன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

போலிஸ் அதிகாரிக்கு SLTJ சார்பாக இஸ்லாமியப் புத்தகங்கள் அன்பளிப்பு.

போலிஸ் அதிகாரிக்கு SLTJ சார்பாக இஸ்லாமியப் புத்தகங்கள் அன்பளிப்பு.
September 15, 2011
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மூலம் கொழும்பு மாளிகாவத்தை போலீஸ் அதிகாரிக்கு இஸ்லாம் தொடர்பாக புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. சகோதரர் பி.ஜெ அவர்கள் எழுதிய இயேசு சிலுவையில் அரையப்படவில்லை என்ற புத்தகமும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகமும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மூலமாக சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது அந்த இரண்டு புத்தகங்களும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் துணை செயலாளர் சகோதரர் ரிஸா யுசுப் அவர்களால் வழங்கப்பட்டது.

SLTJ மாபோலைக் கிளையில் பித்ரா விநியோகம்.

SLTJ மாபோலைக் கிளையில் பித்ரா விநியோகம்.
September 5, 2011
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளையில் சென்ற வருடத்தைப் போல் இந்த வருடமும் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ தலைமை மூலம் பித்ரா விநியோகம்.

SLTJ தலைமை மூலம் பித்ரா விநியோகம்.
September 5, 2011
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக வழமை போன்று இவ்வருடமும் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட பித்ராவை பலரும் பெற்றுப் பயனடைந்தனர்.

sltj மாபோலைக் கிளையினால் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கப் பட்டது.

sltj மாபோலைக் கிளையினால் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கப் பட்டது.
July 9, 2011
உதவிகள்

மார்க்கப் பிரச்சாரத்தை இலங்கை முழுவதும் கொண்டு செல்லும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (sltj) சமுதாய சேவையையும் தன்னால் முடிந்தளவுக்கு முன்னெடுத்து வருகிறது.

மாபோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் இருதய சத்திர சிகிச்சைக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபோலைக் கிளை சார்பாக 11500 ரூபா வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட தொகை சிறுவனின் தாயாரிடம் மாபோலை கிளையினால் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் தொகையைக் கொடுப்பதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஜஸாகல்லாஹு கைரா!

 

SLTJ மானிக்கம்பிட்டிய மற்றும் கதுருவலைக் கிளைகள் சார்பாக, 80 பேருக்கு உணவுப் பொதி வழங்கள்.

SLTJ மானிக்கம்பிட்டிய மற்றும் கதுருவலைக் கிளைகள் சார்பாக, 80 பேருக்கு உணவுப் பொதி வழங்கள்.
July 5, 2011
உதவிகள்

அல்ஹம்துலில்லாஹ்.பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) மானிக்கம்பிட்டி மற்றும் கதுருவலைக் கிளைகள் இரண்டும் ஒன்றாக இணைந்து மார்க்க விளக்கக் கூட்டம்,ஜும்மா பயான்,பொது வேலைகள் போன்ற ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து செய்துவருகிறது. இந்த அடிப்படையில் நேற்று (04.07.2011) மாலை அசர் தொழுகையின் பின் மானிக்கம்பிட்டி கிராமத்தில் வாழும் மக்களில் சுமார் 85 பேருக்கான உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜமாத் இது போன்ற சேவைகளை முன்னெடுத்து வருகிறது. சகோதரர்கள் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.
June 29, 2011
உதவிகள்

இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைப்பதற்காகவும், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வை வழப்படுத்தவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக தனிப் பிரிவு ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை தங்கள் வாழ்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் பல சகோதரர்கள் அதன் தாத்பரியம் புரியாமல் பலவிதமான கொள்கைகளுக்கும் ஆட்படுவதினாலும், பொருளாதார ரீதியிலும், கல்வி, மற்றும் இன்னும் பல விஷயங்களிலும் அவர்கள் பாதிக்கப் படுவதினாலும். அவர்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்டவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஜமாத் செய்ய உத்தேசித்துள்ள செயல்பாடுகள்.

குர்ஆனை சரியான [...]

இஸ்லாத்தை ஏற்றவருக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு.

இஸ்லாத்தை ஏற்றவருக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு.
June 24, 2011
உதவிகள்

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் சமூக சேவைப் பொருப்பாளர் சகோதரர் முயீன் நானா அவர்கள் சகோதரர் பி.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் பிரதி மற்றும் இஸ்லாமியப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.