நிதி உதவிகள்

மாடியிலிருந்து விழுந்து மரணித்தவரின் குடும்பத்துக்கு SLTJ யின் நிதியுதவி

March 21, 2012
நிதி உதவிகள்

கட்டுமானப் பணியில் வேலை செய்து கொண்டிருந்த சகோதரர் எம்.எம்.ஏ.பிரசன்ன என்பவர் எதிர்பாராத விதத்தில் கீழே விழிந்து உயிரிலந்த காரணத்தினால் அவரது குடும்பத்தாருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் நிதி வசூலிக்கப்பட்டு ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து ரூபா 50500  நன்கொடையாக வழங்கப்பட்டது. இதை அவரது மகளாகிய எம்.எம்.ஏ.ஹர்ஷனீ ஜமாஅத்தின் அழைப்பாளரான சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ. அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காட்சி இதோ.

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்
March 10, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன. மூன்று சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 15000 ரூபாய்களும் ஒருவருக்கு தனது இல்லத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக 60000 ரூபாயும் வழங்கப்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் வாழக் கூடிய நவ முஸ்லிம்களுக்கு உதவி செயவதற்காகவும் மார்க்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்தின் நவ முஸ்லிம்களின் அபிவிருத்திக் குழு இந்த உதவிகளை வழங்க தீர்மானித்தது.

சிறு நீரக நோயாளிக்கு SLTJ சார்பாக ஒரு இலட்சம் மருத்துவ உதவி.

சிறு நீரக நோயாளிக்கு SLTJ  சார்பாக ஒரு இலட்சம் மருத்துவ உதவி.
January 9, 2012
சமூக சேவை

மாளிகாவத்தையைச் சேர்ந்த சிறு நீரகம் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் ஒரு இலட்சம் (1,00000) ரூபா மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

ஜமாத்தின் பொதுச் செயலாளர்  சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பணத்தை நோயாளியின் உறவினரிடம் வழங்குவதையும், ஜமாத்தின் சமூகப் பணி பொருப்பாளர் சகோதரர் முயீன்  மற்றும் பொருளாளர் சகோதரர் ஹஸன் நானா ஆகியோர் அருகில் இருப்பதையும் காணலாம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவி.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவி.
January 9, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் புதிய முஸ்லீம்களுக்கான பிரிவின் மூலம் 16,500 ரூபா வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இருதய சத்திர சிகிச்சை க்கு உதவி

இருதய சத்திர சிகிச்சை க்கு உதவி
September 23, 2010
நிதி உதவிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் சமூகப் பணிகளின் ஒர் அங்கமாக இருதய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக்இ பொருளாலர் கமர்தீனையூம் படத்தில் காணலாம். தய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் [...]

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.
September 16, 2010
நிதி உதவிகள்

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.
குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.
இந்தச் செய்தி கடந்த சில [...]