தெருமுணை பிரச்சாரங்கள்

அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள்.

October 11, 2011
தெருமுணை பிரச்சாரங்கள்

அன்பின் சகோதரர்களே!

‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (17-81)

கடந்த 17.09.2011 சனிக்கிழமை மாலை அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஊரான கலாவெவயின் பழைய கொமினிகேஷன் ஜங்ஷன் (டீகோ டவர்) பகுதியில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் பெயரால் நமது சமுதாய மக்கள் செய்யும் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்கள் எவை? அவற்றை செய்பவர்களின் மறுமை நிலை என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரச்சாரகரும், அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நடந்தது என்ன?

பித்அத் மற்றும் இணைவைத்தல் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டதின் பின்னால் பகிரங்க கேள்வி [...]

SLTJ காலி (நாவின்ன) கிளையின் ஏற்பாட்டில் ரமழான் விளக்க நிகழ்ச்சி.

SLTJ காலி (நாவின்ன) கிளையின் ஏற்பாட்டில் ரமழான் விளக்க நிகழ்ச்சி.
July 24, 2011
தெருமுணை பிரச்சாரங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் காலி (நாவின்ன) கிளையின் ஏற்பாட்டில் 24.07.2011 ஞாயிற்றுக் கிழமையன்று ரமழானை முன்னிட்டு சிறப்பு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு “ரமழானின் மகிமையும் மங்கிப் போகும் மாநபி வழிமுறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் சாயல் கூட சென்றடையாத அப்பகுதியில் ஏகத்துவக் கொள்கையை எத்தி வைப்பதற்கு இப்படியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டமை என்பது மிகவும் சந்தோஷத்துக்குறிய ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.