ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மல்வானைக் கிளை சார்பாக சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இந் நிகழ்வில் மல்வானைக் கிளை தலைவர் முர்சிபான் மற்றும் செயலாளர் முராத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் மிஷால் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு இஸ்லாமிய ஒழுக்கவியல் தொடர்பான புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.















