மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

“இஸ்லாமும் நமது ஊரும்” சம்மாந்துரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

May 19, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து தெளிவானதொரு அறிமுகத்தை வழங்கினார். அத்தோடு மஃரிப் தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது.

அடுத்த அமர்வு  மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் DISc ‘இது தான் இஸ்லாம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயத்தில் இஸ்லாம் என்று தவறாக சித்தரிக்கப்படுபவற்றை இணங்காட்டி உண்மையான இஸ்லாம் எது என்பதையும் வஹியின் பிரகாரம் தான் எமது  வாழ்க்கை அமையவேண்டும் என்பன போன்ற முக்கிய தகவலகளை மையமாகக் கொண்டு தமது உரையை நிகழ்த்தினார்.

இறுதியாக ‘இஸ்லாமும் நமது ஊரும்’ [...]

சாய்ந்தமருது வில் நடைபெற்ற பகிரங்க மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

சாய்ந்தமருது வில் நடைபெற்ற பகிரங்க மார்க்க விளக்க பொதுக் கூட்டம்
May 13, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் ஆரம்பிக்கப்பட்ட இம்மார்க்கச் சொற்பொழிவு
மாலை 05.00 மணிக்குத்தான் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் மாலை
04.00 மணிக்கே மக்கள் அரங்கத்தை  சுற்றி குழுமிவிட்டார்கள்.

சத்தியத்தை எந்த விதமான ஒழிவு மறைவுமின்றி எடுத்துரைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் முதலாவது பிரச்சார மேடைசாய்ந்தமருது கடற்கரைத்திடலில் நாட்டப்பட்டது.ஆரம்ப உரையாகவே சகோதரர் அல்தாபி நிகழ்த்திய  இஸ்லாம் கூறும் மனோதத்துவம் எனும் தலைப்பிலான உரை ஒலி பெருக்கியின் ஊடாக அங்கு கூடியிருந்த அனைவரின் உள்ளத்தையும் வெகுவாக கவர்ந்தது.

மாலை 05.30 மணிக்கு சகோதரர் நிக்றாஸ் தலைமை உரையாக கல்விக் காவலர்களின் கவனத்திற்கு!
எனும் தலைப்பில் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். எமது நாட்டிலுள்ள முஸ்லிம்
பாடசாலைகளில் நடைபெறும் மார்க்க விரோதச் செயல்களை  தனது வாழ்வில் இருந்தே
சுட்டிக் காட்டினார்.

அடுத்த அமர்வு, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது……

ஸ்ரீ லங்கா [...]

தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள் – மக்கொனை பொதுக்கூட்டம்

தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள் – மக்கொனை பொதுக்கூட்டம்
April 10, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

பேருவலை மக்கொனை கிளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 07.04.2012ம் திகதி மக்கொனையில்  நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் “நாங்கள் ஏன் தனித்து செயல் படுகிறோம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து “தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள்” எனும் தலைப்பில்    ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துனை பொதுச் செயலாளர் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்கள் உரை நிகழ்த்தினார். மக்கள் மத்தியில் சன்மார்க்கத்தை பகிரங்கமாக எடுத்துரைக்கும் இது போன்ற இன்னும் நிகழ்ச்சிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தோய்வின்றி தொடர்ச்சியாக செய்யும். இன்ஷா அல்லாஹ்!

SLTJ வட்டதெனிய கிளையில் நடைபெற்ற கொள்கை விளக்க நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

SLTJ வட்டதெனிய கிளையில் நடைபெற்ற கொள்கை விளக்க நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
March 5, 2012
எளிய மார்க்கம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வட்டதெனிய கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் முஸ்லிம் சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி 03.03.2012 ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு வட்டதெனிய எனும் ஊரில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தடுப்பதற்காக ஊர் பள்ளிவாசல் நிர்வாகச் சபையும் ஊர் பிரமுகர்களும் பல முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுப்பதற்கு ஒரு சிலர்  முயன்ற போதும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லை.  சகோதர் ரியாஸ் MISc அவர்கள் கொள்கை விளக்கம் அளிக்க சகோதரர் பர்ஸான் அவர்கள் பொதுமக்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார். ஆண்கள், பெண்கள் என பலர் இதில் [...]

Bro.Althafi’s participation of the Islamic conference in Kalawewa.

Bro.Althafi’s participation of the Islamic conference in Kalawewa.
December 18, 2011
எளிய மார்க்கம்

The Islamic conference was organized by Kalawewa, Horopola and Negama branches of Sri Lanka Thawheed Jamath at Kalawewa in the Anuradhapura district.

Bro.Fakeer Mohamed Althafi from Tamil Nadu Thawheed Jamath conducted this event. He is a senior member of Tamil Nadu Thawheed Jamath management. He spoke on the titled ‘Alikkappada vendiya asathiyangal’ (destroyable falsehood) according to the Quran and the sunnah. He commented on the people who pretend as followers of thawheed but indulge in the acts [...]

கலாவெவயில் ”அல்தாஃபி” கலந்து கொண்டு உரையாற்றிய இஸ்லாமிய மாநாடு.

கலாவெவயில் ”அல்தாஃபி” கலந்து கொண்டு உரையாற்றிய இஸ்லாமிய மாநாடு.
December 6, 2011
எளிய மார்க்கம்

அனுராதபுர மாவட்டம், கலாவெவ என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, ஹோராப்பொல மற்றும் நேகம ஆகிய மூன்று கிளைகளும் இணைந்து நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டடிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அழிக்கப்பட வேண்டிய அசத்தியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் என்ற போர்வையில் நுழைந்துள்ள போலிகளை இணங்காட்டியதுடன் தவ்ஹீத் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் ஏமாற்றித் திரிபவர்களின் உண்மைத் தன்மையையும் திருமறைக் குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் அழகான முறையில் தெளிவாக விபரித்துரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு [...]

மாத்தரைக் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி.

மாத்தரைக் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி.
August 24, 2011
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாத்தரைக் கிளை சார்பாக ஏகத்துவப் பிரச்சாரம் மிக வீரியமாக செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த வியாழக் கிழமை மாத்தரைக் கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பித்அத்தும் இணை வைப்பும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை தடுக்கும் விதமாக மார்க்க எதிர்பாளர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள்.