ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்கும் இடையில் எதிர்வரும் 21,22ம் திகதிகளில் “இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?” என்ற தலைப்பில் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் பகிரங்க விவாதம் நடாத்துவதாக இரு சாராருக்குமிடையில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தின் போது ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது.
அதன் போது விவாதிப்போர் பட்டியலை ஏப்பரல் மாதம் முதலாம் திகதி இரு சாராரும் விவாத ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் விவாதத்திற்காக ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக விவாதிப்பவர்களின் பட்டியலை தந்துள்ளனர். விவாதமொன்றுக்கு முன்னரே விவாதிப்பவர்களை ஏன் தெரியப்படுத்த வேண்டுமென்தை அறிந்த இவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் விவாதிப்போரை மொட்டையாக அறிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் [...]














